Template:Suvadu Journal/Introduction

From Noolaham Foundation
Revision as of 07:15, 31 January 2014 by Shaseevan (talk | contribs)
Jump to navigation Jump to search
Noolaham Journal Logo.jpg

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், தனது ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2014ம் ஆண்டிலிருந்து ”நூலகம்” எனும் ஆய்விதழை தொடர்ச்சியாக வெளியிடவுள்ளது. நமது சமூகங்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்தலையும் அவற்றை விரைவாக்கலையும் செய்யவிருக்கின்ற “நூலகம்” ஆய்விதழானது, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை சீரிய முறையில் பரிசீலித்து வெளியிடலை தனது பிரதான செயற்பாடாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆய்விதழானது, நூலகம் அமைப்பு இன்று வரை செய்து வந்த ஆவணப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வுச் செயல்திட்டங்களை ஒருங்கிணைப்பதாகவும், தமிழ்ச்சமூகத்தின் மரபுரிமையாக அமையும் ஆவணங்கள் குறித்த அறிவுசார் உரையாடலை வளர்ப்பதற்கான களமாகவும் அமையும்.


இவ்விதழ் ஆண்டுக்கு இருதடவை வெளியாகும்.