Template:Sengai Aaliyan Digitization
Revision as of 00:06, 19 October 2020 by Safna Iqbal (talk | contribs)
இச் செயற்றிட்டமானது ஈழத்தின் மூத்த ஆளுமையான செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் நன்கறியப்படும் கந்தையா குணராசாவின் ஆவணங்களை எண்ணிமப்படுத்தலை நோக்கமாகக் கொண்டது. க.குணராசா ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் பொதுஅறிவு நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் தடம் பதித்தவர். அவரது ஆவணங்களையும், அவரது சேகரிப்புக்களையும் ஆவணப்படுத்தலின் முக்கியம் கருதி இச்செயற்றிட்டம் 2016 இல் மேற்கொள்ளப்பட்டது